ஆப்நகரம்

ஆதார் கார்டில் 100 வயது... பயிர்க்கடன் கேட்டபோது அதிர்ச்சி

விவசாயியான இவர் பயிர்க்கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தபோது ஆதார் கார்டில் உள்ள விவரத்தின் அடிப்படையில் இவருக்கு 100 வயது என கருத வேண்டி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Edited byபாம்பன் மு.பிரசாந்த் | Samayam Tamil 1 Dec 2020, 1:04 pm
ஆதார் அட்டை அறிமுகமான நாள் முதல் அதன் தகவல்களில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளைத் திருத்த, நாள்தோறும் மனுக்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. கணவர் பெயர் தந்தை பெயர் குழப்பம், ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் பதிவு செய்த குழப்பம் என ஆதார் குழப்பங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
Samayam Tamil aadhaar


இந்நிலையில், தனக்கு 100 வயது என்று பதிவாகியுள்ளது என்றும் அதனை மாற்ற வேண்டும் என்று கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு கொடுத்துள்ளார்.

சேலம் அடுத்த அரூர் அருகே உள்ள சூரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தி. தற்போது இவருக்கு வயது 39. இவருடைய ஆதார் கார்டில் இவர் 1921-ம் ஆண்டு பிறந்ததாக தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயியான இவர் பயிர்க்கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தபோது ஆதார் கார்டில் உள்ள விவரத்தின் அடிப்படையில் இவருக்கு 100 வயது என கருத வேண்டி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

செயல்படாத கருவிக்கு ரூ.208 கோடி... ஆர்.டி.ஐ. அம்பலம்?

இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி ஆதார் கார்டில் திருத்தம் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தார். ஒரு விவசாயி பயிர்க்கடன் கேட்க வ்ரும்போது அவரது மனநிலையையும், குடும்ப நெருக்கடியையும் மனதில் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்த பட்சம் இதைக் கருத்தில் கொண்டாவது ஆட்சியர் அலுவலகம் விரைந்து நடவடிக்கை எடுத்தால் நலம்.

அடுத்த செய்தி