ஆப்நகரம்

காவிரி-சரபங்கா திட்ட எதிர்ப்பு... கலெக்டர் ஆஃபீசில் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இத்திட்டம் தொடர்பான ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

Samayam Tamil 10 Nov 2020, 5:25 pm
காவிரி - சரபங்கா நீரேற்று திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஆட்சேபணை மனு வழங்க முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil cauvery


மேட்டூர் அணையின் உபரி நீரை நீரேற்று திட்டம் மூலம் அனுப்பி 100 ஏரிகளை நிரப்பும் காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்மையில் துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தை விவசாயிகள் விளை நிலம் வழியாக கொண்டு செல்லாமல், ஏற்கனவே உள்ள நீர்வழி பாதை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இத்திட்டம் தொடர்பான ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

தமிழக பள்ளிகள் திறப்பு: முதல்வர் சொல்வது என்ன?

முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்க முயன்ற போது ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் 5 நபர்களை மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதித்ததால் விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி