ஆப்நகரம்

போராட்டத்தில் குதித்த சேலம் விவசாயிகள்: தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றுவாரா முக ஸ்டாலின்?

சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்

Curated bySrini Vasan | Samayam Tamil 9 May 2022, 4:04 pm

ஹைலைட்ஸ்:

  • போராட்டத்தில் குதித்த சேலம் விவசாயிகள்
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சேலம் விவசாயிகள்
சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டு வழி சாலை திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான நில அளவீடு பணிகள் நடைபெற்றது.
இந்தநிலையில் விவசாயிகளின் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிரான கடுமையான போராட்டம் காரணமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவது தள்ளிவைக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் எட்டு வழி சாலை திட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டோம் என திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசு மீண்டும் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எட்டு வழி சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மத்திய அமைச்சரின் இந்த எட்டுவழிச்சாலை அறிவிப்பு விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கையை கண்டித்து எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு!
மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் 8 வழிசாலை திட்டத்தை செயல்படுவதாகவும் இதனால் எட்டு வழி சாலை விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்றும் ஏற்கனவே இந்த திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இத்திட்டத்தை முடக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி