ஆப்நகரம்

ஒரு பக்கம் மழை, ஒரு பக்கம் கோமாரி நோய்… கால்நடைகளை காப்பது எப்படி?- சிறப்பு முகாம்!

வடகிழக்கு பருவமழையையொட்டி கள்ளக்குறிச்சி அருகே கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Samayam Tamil 27 Nov 2021, 6:39 pm
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி இன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாமனந்தல் என்ற கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
Samayam Tamil கள்ளக்குறிச்சி


இந்த முகாமில் மாமனந்தல் கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளை கொண்டு வந்து மருத்துவ முகாமில் சேர்த்து கால்நடை பராமரிப்புத் துறையினர் மேற்கொண்ட சிகிச்சைகளை கால்நடைகளுக்கு செய்துகொண்டனர்.

இந்த முகாமில் கால்நடைகளுக்கு தாது உப்பு, விட்டமின் மாத்திரைகள், சத்துமருந்துகள், குடற்புழு நீக்க மருந்துகள், உள்ளிட்ட பலவகையான மருந்துகளை கால்நடை பராமரிப்புத் துறையினர் கால்நடை வளர்ப்பவர்களிடத்தில் வழங்கினார்கள்.

இந்த முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மனோகரன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சாந்தி, கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பெரியசாமி, க மாமனந்தல் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் ஆகியோர் முகாமில் கலந்துக்கொண்டனர்.

அடுத்த செய்தி