ஆப்நகரம்

சேலம் அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த நர்சுகள் திடீர் போராட்டம்!

சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென வார்டு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவிலியர் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டம்.

Samayam Tamil 26 Feb 2021, 6:51 pm

ஹைலைட்ஸ்:

  • செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம்...
  • கடும் மன உளைச்சலுக்கு ஆளாகப் படுவதாக செவிலியர்கள் கதறல்...
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சேலம் அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த நர்சுகள் திடீர் போராட்டம்!
சேலம் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ வருடத்திற்கு ஒரு முறையோ வார்டுகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் செவிலியர்களுக்கு முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் திடீர் என வார்டு மாற்றம் செய்யப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் வழியாகச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கும் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களுக்கு மன உளைச்சலில் ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

மேலும் போராட்டக்காரர்கள் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தியை இடமாற்றம் செய்யக் கோரிக்கை கோரிக்கை விடுத்தனர்.

போராட்டக்காரர்கள் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் செவிலியர்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர். அரசு செவிலியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்ததால் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி