ஆப்நகரம்

சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்: காவல்துறையினர் அதிரடி!

சேலத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான 25 கிலோ ஹான்ஸ் குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்...

Curated bySrini Vasan | Samayam Tamil 30 Jun 2022, 7:52 pm

ஹைலைட்ஸ்:

  • கடைக்கு சீல் வைத்து காவல்துறை நடவடிக்கை.
  • உரிமையாளர் தலைமறைவு.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil குட்கா பறிமுதல்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையுடன் இணைந்து உணவு த்துறை அதிகாரிகள் சோதனை நடத்த ஆலோசிக்கப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன் அடிப்படையில் இன்று சேலம் மாநகரம் தாதகாப்பட்டி பகுதியில் காவல் உதவி ஆணையாளர் அசோகன் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சந்திரகலா உள்ளிட்ட காவல்துறையினரும் உணவு அலுவலர்களும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மகேந்திர குமார் என்பவருக்கு சொந்தமான முருகன் டிரேடர்ஸ் மொத்த விற்பனை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா ஆகியவை மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையினர் அதை பிரித்து பார்த்த போது சுமார் 25 கிலோ பண்டல்கள் இருந்தது. இதன் மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாய் இருக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து கடைக்கு சீல் வைத்தனர மேலும் கடையின் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி