ஆப்நகரம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால்...? - சீமான் பளீச் பதில்..!

மொத்த பயங்கரவாதியும் ஆர்எஸ்எஸ், பிஜேபியில் தான் உள்ளார்கள் என்று சீமான் தெரிவித்து உள்ளார்.

Authored byVelayuthan Murali | Samayam Tamil 28 Nov 2022, 3:28 pm
மொத்த பயங்கரவாதியும் ஆர்எஸ்எஸ், பிஜேபியில் தான் உள்ளார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
Samayam Tamil Seeman
சீமான்


சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் ஆளுநருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. மக்களின் நலன் கருதி எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் நகர்ந்து போடுகிறது. இதனால் தான் ஆளுநரை அவசியம் இல்லை என்று சொல்கிறோம்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி ஒரு முடிவு எடுக்கிறது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் தடுக்கிறார். அப்படி என்றால் எட்டு கோடி மக்களுக்கு மதிப்பு எங்கு உள்ளது? எங்கு ஜனநாயகம் உள்ளது? ஆளுகின்ற திமுக தவறான பாதையில் செல்கிறதாக அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். பாஜக ஆட்சியில் எதில் சரியாக செல்கிறது. எல்லாம் எடுத்து தனியார் முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார்கள். மக்களை பதற்றத்தில் வைத்துள்ளனர்.

அனைத்தும் ஆதார் தான் என்றால் தேசிய குடியுரிமைச் சான்றிதழ் எதற்காக? பாஜக ஆளும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் சரியான பாதையில் செல்கிறதா? ஏதாவது ஒன்றை கூறி வருகிறார்கள். தமிழகத்தில் இலவசத்தை தொடக்கத்திலிருந்து வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி எதிர்த்து வருகிறோம், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் மக்கள் அரசு, தேர்தல் நேரத்தில் அறிவித்து நாங்கள் வந்தால் இதை வழங்குகிறோம், அதை வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்து இதை தர வேண்டியது தானே. இதுவும் ஒருவித கையூட்டு தான்.
உடுமலை திருமூர்த்தி மலையில் 1000 ஆண்டு பழமையான கொற்றவை சிலை கண்டெடுப்பு!
மொத்த பயங்கரவாதியும் ஆர்எஸ்எஸ், பிஜேபியில் தான் உள்ளார்கள். பாஜக பெண் நிர்வாகிகள் மீது தரைகுறைவாக பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது .பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியாக கையாள வேண்டும். பெண்ணை போற்றாத எந்த நாடும் பெருமை அடையாது என்று கூறுகிறார்கள். இந்த விவகாரம் அநாகரீகமானது, வருத்தம் அளிக்கிறது.

தமிழக அரசின் செயல்பாடு கேள்வி கேட்கும் அளவிற்கு உள்ளது. தமிழகத்தில் முன்பைவிட போதைப் பொருட்கள் விற்பனை கூடியுள்ளது. சட்டம் ஒழுங்கு எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பும் அளவில் உள்ளது. பாஜக யாருடைய காலடியில் நிற்குமே தவிர, அதிமுக யாருடைய காலடியிலும் நிற்காது. பாஜக பெரிய கட்சி என்று கூறுகிறார்கள் தனித்து நிற்க முடியுமா?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது அவசியமற்ற ஒன்று. புதிய கல்விக்கொள்கையை நாம் எதிர்க்கிறோம். ஆனால் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்திலும் புதிய கல்வி கொள்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், நாடே தலைகீழாக மாறிவிடும்; சிங்கப்பூராக மாறி வந்துவிடும்; காலையில் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கிண்டல் அடித்தார்.
எழுத்தாளர் பற்றி
Velayuthan Murali
நான் மு.வேலாயுதன். MBA பட்டதாரி. பத்திரிகை துறை மீது ஆர்வம் கொண்ட நான், 17வது வயதில், அச்சு ஊடகத்தில் காலடி எடுத்து வைத்தேன். சுமார் 5 ஆண்டுகள் கடந்த பயணம், என்னை, காட்சி ஊடகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு 2 ஆண்டுகள் தொடர்ந்த பயணம், என்னை, டிஜிட்டல் ஊடகத்திற்கு அழைத்து வந்தது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் தொடர்பான நடப்பு செய்திகளை எழுதி வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் சமரசம் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி