ஆப்நகரம்

காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... விவசாயிகள் உற்சாகம்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதன் காரணமாகக் காவிரி பாசன விவசாயிகள் மத்தியில் பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Nov 2020, 9:46 am
கர்நாடக மாநிலத்தில் பதிவாகும் மழையின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அமைகிறது. இந்த சூழலில் சமீப காலமாகக் காவிரி நதியை ஒட்டியுள்ளப் பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
Samayam Tamil காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... விவசாயிகள் உற்சாகம்!
காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... விவசாயிகள் உற்சாகம்!


இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, விநாடிக்கு 10 ஆயிரத்து 861 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதுவே நேற்றைய நிலவரப்படி நீர் வரத்து 10 ஆயிரத்து 392அடி ஆக இருந்தது.

அணையின் நீர்மட்டம் 95.17 அடியாக உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர் இருப்பு 59.12 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரும் அதேவேளைப் பாசனத்திற்காக நீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டுள்ளது.

நிரம்புகிறது சென்னை ஏரிகள்: அடுத்த 6 மாதத்திற்கு வீட்டிற்கே மெட்ரோ வாட்டர்!

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி