ஆப்நகரம்

சேலத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட கலெக்டர்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பங்கேற்று வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

Curated bySrini Vasan | Samayam Tamil 17 May 2022, 4:20 pm

ஹைலைட்ஸ்:

  • கிராம கணக்குகளை சரி பார்க்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி
  • 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த முகாமில் மல்லிகரை, அரசநத்தம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, தாண்டவராயபுரம் உள்ளிட்ட 16 கிராமங்களுக்கான ஜமாபந்தி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்ட பணிகள், மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா, உதவித் தொகை கோரும் மனு, ஜாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு உள்ளிட்ட சான்றிதழ் கேட்டு மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

மேலும் அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இந்த மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த அந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிலத்தை அபகரித்த அதிமுக நிர்வாகி பழனிச்சாமி: 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போராட்டம்!
இதில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, வட்டாட்சியர் மாணிக்கம் மற்றும் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி, மின்சாரத்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் பங்கேற்றனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி