ஆப்நகரம்

முதல்வர் ஏரியாவில் இப்போதும் லாட்டரி சேல்ஸ் அமோகம்: எப்போது தீரும்?

எடப்பாடியில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த நான்கு பேரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 24 Apr 2021, 5:50 pm
சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடப்பதாக எடப்பாடி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil முதல்வர் ஏரியாவில் இப்போதும் லாட்டரி சேல்ஸ் அமோகம்: எப்போது தீரும்?


அதனடிப்படையில் எடப்பாடி காவல்துறை உதவி ஆய்வாளர் பெரியதம்பி தலைமையிலான காவல்துறையினர் மேட்டுத்தெரு, சந்தைப்பேட்டை, அங்காளம்மன் கோயில் தெரு, வெள்ளாண்டி வலசு, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாயவன், செல்வராஜ், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார், வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்த முருகன், ஆகியோரை கைது செய்தனர்.

ஆப்ரேஷன் பண்ணமாட்ராங்க கொலை பண்ணுங்க இங்கயே: கைதி சேலத்தில் அட்டகாசம்!

கைது செய்த நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். முதல்வர் மாவட்டத்தில் அமோகமாக நடந்து வரும் லாட்டரி விற்பனையைத் தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி