ஆப்நகரம்

கொத்து கொத்தாகச் செத்துக் கிடக்கும் கோழிகள்: பறவை காய்ச்சல் வந்தாச்சா!

மேட்டூர் அடுத்த கொளத்தூர், காவேரி புரத்தில் நாட்டுக் கோழிகளின் திடீர் இறப்பு குறித்து கால்நடைத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Samayam Tamil 20 Jan 2021, 10:28 am
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூரில் காவிரிக் கரையோர கிராமமான, காவேரிபுரத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் மாமிச தேவைக்காக வீட்டுக்கு வீடு நாட்டுக்குக் கோழிகளை வளர்த்து வருகின்றனர்.
Samayam Tamil கொத்து கொத்தாகச் செத்துக் கிடக்கும் கோழிகள்: பறவை காய்ச்சல் வந்தாச்சா!


இவைகள் ஓரிரு நாட்களாக ஒவ்வொருவரின் கோழிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக சுமார் 20க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென மர்மமான முறையில் இறந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி வாழ் மக்கள் கால்நடைத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சேலம் மாவட்ட கால்நடைத் துறையில், நோய் புலனாய்வு உதவி இயக்குநர், சின்னதண்டா, கால்நடைத் துறை உதவி மருத்துவர் அரங்கநாதன் மற்றும் மருத்துவ குழுவினர் இறந்த கோழிகளை உடற்கூறு ஆய்வு செய்து, அவைகள் உட்கொண்ட தானியம், தண்ணீர் ஆகியவற்றின் மாதிரி எடுத்துச் சென்றுள்ளனர்.

குத்தி பறக்கவிட்ட காளைகள், நமக்கு விளையாட்டுனாலே இப்படிதான!

இது குறித்து கால்நடைத் துறையினர் தெரிவிக்கையில் ஆய்வுகளின் முடிவில் கோழிகளின் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றனர். இதற்கிடையே கோழிகள் இப்படி செத்து கிடப்பது பறவை காய்ச்சல் காரணமாகவா என பெரும் அச்சம் எழுந்துள்ளது.t

அடுத்த செய்தி