ஆப்நகரம்

எடப்பாடி : அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

எடப்பாடியை அடுத்துள்ள அரசிராமணி குள்ளம்பட்டி அருள்மிகு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீஅய்யனாரப்பன் ஆகிய இரண்டு கோவில்களில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 12 Jun 2022, 9:10 am

ஹைலைட்ஸ்:

  • அருள்மிகு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீஅய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்
  • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அய்யனாரப்பன்
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள அரசிராமணி குள்ளம்பட்டியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ அய்யனாரப்பன் ஆகிய இரண்டு கோயில்களின் கும்பாபிஷேக இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
முன்னதாக கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வானவேடிக்கை, தாரை சப்தம் ஒலிக்க யாகசாலையிலிருந்து சிவாச்சாரியர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்து முதலில் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலிலுள்ள கோபுர கலசத்திற்கும் அடுத்ததாக ஸ்ரீ அய்யனாரப்பன் கோவில் கோபுர கலசத்திற்கும் புனித தீர்த்தத்தினால் ஓம்சக்தி, பராசக்தி என முழக்கமிட்டபடி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டிய பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

திமுக, அதிமுக, பாமக ஒரே கூட்டணி; ரகசியத்தை உடைத்த சேலம் விசிக!
தொடர்ந்து ஸ்ரீராஜராஜேஸ்வரி சுவாமிக்கும், ஸ்ரீ அய்யனாரப்பன் சுவாமிக்கும் புஷ்பங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது.

இந்த இரண்டு கோவில்களின் கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமிகளை வழிபட்டுச்சென்றனர். கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி