ஆப்நகரம்

பரிசு மழையில் மாரியப்பன் தங்கவேலு… எல்.ஐ.சி.நிறுவனம் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு எல்.ஐ.சி.நிறுவனத்தின் தென்மண்டலம் சார்பில் 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Samayam Tamil 3 Nov 2021, 4:50 pm
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 24 முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
Samayam Tamil Mariyappan thangavelu
மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.50 லட்சம் வழங்கிய எல்.ஐ.சி


இதனையடுத்து மாரியப்பனுக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, தலைமைச்செயலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் துணை மேலாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும், எல்.ஐ.சி. நிறுவனம் சார்பில் மாரியப்பனை கவுரவிக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

எல்ஐசியின் தென்மண்டல மேலாளர் கதிரவன் முன்னிலையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எல்ஐசி சேலம் கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளர் சுதாகர் பாபு, சென்னையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் ஐம்பது லட்ச ரூபாய்க்கான காசோலையை மாரியப்பனுக்கு வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் எல்ஐசி சேலம் கோட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

அடுத்த செய்தி