ஆப்நகரம்

பள்ளி மாணவியிடம் சில்மிஷம்... ஆத்தூரில் லாரி டிரைவர் கைது!

ஆத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 23 Jan 2021, 1:02 pm
சேலம் மாவட்டம், ஆத்தூர் இரயிலடி தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார்(28). லாரி டிரைவரான இவர், கடந்த 16ம் தேதி தலைவாசல் அடுத்த மணிவிழந்தான் புதூரில் அவரது பாட்டி வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தார்.
Samayam Tamil பாலியல் வழக்கில் கைதான லாரி டிரைவர்
சேலம், ஆத்தூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவர் கைது


அப்போது அருகில் இருந்த பள்ளி மாணவிக்கு அரவிந்த் குமார் பாலியல் தொல்லை கொடுத்ததுள்ளார். இதுதொடர்பாக ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணைக்கு சென்றபோது அரவிந்த் குமார் திடீரென தலைமறைவானார். இதனையடுத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய அவரை தேடி வந்தனர்.

போலி வனத் துறை அதிகாரி வேடம்...கோவில் வாட்ச்மேன் செஞ்சிட்டு இருந்த வேலைய பாருங்க!

இந்த நிலையில் நேற்றிரவு ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் செல்ல இருந்தபோது இரவு ரோந்து பணிக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின் அரவிந்த் குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி