ஆப்நகரம்

லாரி ஸ்ட்ரைக்... இனி புக்கிங் கிடையாது: ஏஜெண்ட்கள் அறிவிப்பு

நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் கோடி உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடையும் என்பதால், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுக்க வேண்டும்.

Samayam Tamil 22 Dec 2020, 3:05 pm
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த எதிரொலியாக வருகின்ற 26ஆம் தேதி முதல் லாரிகள் புக்கிங் செய்யமாட்டோம் என தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
Samayam Tamil லாரி ஏஜெண்ட்கள் சம்மேளனம்


இது தொடர்பாக, தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளன மாநில தலைவர் ராஜவடிவேல் சேலத்தில் பேட்டி அளித்தார். அவர் தெரிவித்ததாவது, “லாரி உரிமையாளர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 27-ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ்நாடு புக்கிங் லாரி ஏஜென்டுகள்சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

அதனை வெளிப்படுத்தும் விதமாகஇதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள 5,635 லாரி புக்கிங் ஏஜெண்டுகள் 26 முதலே பார்சல் புக்கிங் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்

ரஜினி, கமல் கூட்டணியை ரசிகர்கள் விரும்பலாம்... மக்கள்???

இதனால் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் கோடி உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடையும் என்பதால், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், “நாள்தோறும் ஏகிறும் டீசல் விலையினால் நிலையான லாரி வாடகை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. இதனால் டீசல் விலையை 3 மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணியக்க வேண்டும்” என கோரிக்கை கோரிக்கை விடுத்தார் பேட்டியின்போது சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அடுத்த செய்தி