ஆப்நகரம்

ஏரியில் குளிக்க சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்!

ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஆத்தூர் அருகே உள்ள கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏரியில் மூழ்கிய சிறுமியை தீயணைப்புப் படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Samayam Tamil 18 Jan 2021, 5:59 pm
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பைத்தூர் நைனார்பாளையத்த்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (55). இவர் ஆத்தூர் தெற்கு மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வருகிறார்.
Samayam Tamil ஏரியில் மாயமான சிறுமியை தேடும் தீயணைப்பு படையினர்
சேலம், கெங்கல்லி அருகே ஏரியில் மாயமான சிறுமியை தேடும் தீயணைப்பு படையினர்


இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் மகன் அருள்மணி, மகள்கள் அபிநயா, சுமேகா ஆகியோர் உள்ளனர். கெங்கவல்லியை அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில், வென்னிலா தம்பதியின் மகள் தேவி (11) .

இரு குடும்பத்தினரும் பொங்கல் பண்டிகை கொண்டாடிய நிலையில், நேற்று விடுமுறை நாள் என்பதால் இவர்கள் தனது உறவினர்களுடன் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரிக்கு குளிக்க சென்றனர்.

அம்பேத்கர் படத்தை அகற்றிய சேலம் ரயில்வே: பெரும் சர்ச்சை!

அனைவரும் உற்சாகமாய் குளித்துக் கொண்டிருந்த நிலையில் அண்ணாமலையும், சிறுமி தேவியும் நீண்ட நேரமாகியும் ஏரியில் இருந்து வெளியே வரத்தால் உறவினர்கள் சந்தேகமடைந்து கூச்சலிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், அண்ணாமலையை சடலமாக மீட்டனர். நீரில் மூழ்கிய சிறுமி தேவியை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பைத்தூர் மற்றும் கடம்பூர் பகுதி மக்களிடத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி