ஆப்நகரம்

காதல் வந்தது என தங்கையிடம் சொன்ன உறவினரை வெட்டி கூறுபோட்ட சேலம் அண்ணன்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனது தங்கையைக் காதலித்த நபரை அரிவாளால் வெட்டிய அண்ணனின் செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 23 Jun 2021, 4:55 pm
தங்கையைக் காதலித்த நபரை வெட்டிக் கொலை செய்த நபரைச் சேலம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil காதல் வந்தது என தங்கையிடம் சொன்ன உறவினரை வெட்டி கூறுபோட்ட சேலம் அண்ணன்!


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மாதையன்குட்டையைச் சேர்ந்த அமிர்தன். வயது 19. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ, சிவில் படித்து வருகிறார்.

இவரது உறவினரான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார். வயது 25. இவரது தங்கை இந்துமதி. வயது 19. மேச்சேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார்.

இந்த சூழலில் அமிர்தனுக்கு இந்துமதி மீது காதல் வந்துள்ளது. இதையடுத்து ஒருகட்டத்தில் இந்துமதியிடம் தனது காதலை அமிர்தன் வெளிப்படுத்தியுள்ளார்.
மீண்டும் ஒரு சாத்தான்குளம்: போலீஸ் தாக்கியதில் விவசாயி பலி!
இந்த விவகாரத்தை இந்துமதி தனது அண்ணன் சதீஷ்குமாரிடம் கொண்டு சென்றுள்ளார் எனத் தெரிகிறது. இதையடுத்து அமிர்தனின் வீட்டுக்குச் சென்ற அண்ணன் சதீஷ்குமார் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அமிர்தன் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷ் குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி