ஆப்நகரம்

தொடர்ந்து 2வது நாளாக அதிகரிக்கும் மேட்டூர் நீர் வரத்து!

மேட்டூர் அணையில் நீர் வரத்து சுமார் ஆயிரம் கன அடி அதிகரித்து 7 ஆயிரத்து 770 கன அடி வந்து கொண்டிருக்கிறது...

Samayam Tamil 16 Nov 2020, 8:54 am
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது, இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் 94 அடியைத் தாண்டியுள்ளது. அதேவேளைப் பாசனத்திற்காக நீரும் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது.
Samayam Tamil தொடர்ந்து 2வது நாளாக அதிகரிக்கும் மேட்டூர் நீர் வரத்து!
தொடர்ந்து 2வது நாளாக அதிகரிக்கும் மேட்டூர் நீர் வரத்து!


மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. அணையின் நீர் வரத்து நேற்றைய நிலவரப்படி 6 ஆயிரத்து 497 கன அடியாக இருந்த சூழலில், காலை நிலவரப்படி நீர் வரத்து 7 ஆயிரத்து 770 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94. 36 அடியாக உள்ளது. அதன்படி அணையில் நீர் இருப்பு 57. 77 டிஎம்சி ஆகும். காவிரி நீர் ஆதாரப் பகுதிகளில் பதிவாகும் மழைக் காரணமாகவே நீர் வரத்து அதிகரிக்கிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாம் நாள் சஷ்டி விழா... களைகட்டும் முருகன் கோயில்

மழை இல்லாமல் காணப்படும் நேரத்தில் நீர் வரத்து வெகுவாக குறைகிறது. இதற்கிடையே டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி