ஆப்நகரம்

எச்சரிக்கை... 100 அடியைத் தொடப்போகும் மேட்டூர் அணை

நேற்று 98.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 98.58 அடியாக உயர்ந்தது.

Samayam Tamil 26 Nov 2020, 9:12 am
நாளுக்கு நாள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. வெளியேற்றப்படும் நீரின் அளவை விட நீர் வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்வது தொடர்ந்து வருகிறது.
Samayam Tamil mettur dam


அணையில் இருந்து காவிரி வாய்க்காலில் 500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து வெளியேறும் இந்த அளவு குறைவான அளவே.

இந்நிலையில், நேற்று 98.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 98.58 அடியாக உயர்ந்தது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

நிவர் புயல் கரையை கடந்தபின் என்ன நடக்கும்? லேட்டஸ்ட் அப்டேட்!

மொத்த நீர்மட்டம் 120 அடி என்பதும் 100 அடியைத் தொட்டுவிட்டாலே பெருமளவு தண்ணீர் திறக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி