ஆப்நகரம்

கொளுத்தும் வெயிலில் மாணவர்களுடன் யோகா செய்த அமைச்சர் மா.சு..!

கொளுத்தும் வெயிலிலும் மாணவர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 22 Jun 2022, 6:18 pm

ஹைலைட்ஸ்:

  • மாணவ மாணவிகளுடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் யோகா பயிற்சி செய்தார்.
  • மழலை குழந்தைகளின் யோகாசனம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது
  • கொளுத்தும் வெயிலிலும் அமைச்சர் மாணவ, மாணவிகளுடன் யோகாசனப் பயிற்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மாணவர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் யோகா பயிற்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்துகொண்டு யோகாசனம் செய்தார். இவருடன் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் யோகாசனம் செய்தனர். குறிப்பாக மழலை குழந்தைகளின் யோகாசனம் காண்போரை வியக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.
மேலும் வழக்கமாக காலை 8 மணிக்குள் நடைபெறும் யோகா பயிற்சி இன்று 10 மணிக்கு மேல் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. கொளுத்தும் வெயிலிலும் அமைச்சர் மாணவ, மாணவிகளுடன் யோகாசனப் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி