ஆப்நகரம்

சேலத்தில் மாநில அளவிலான இளையோர் இறகு பந்து போட்டி: அசத்திய மாணவ, மாணவிகள்!

சேலத்தில் ட்டுவின் பேட்மிட்டன் அகடாமி நடத்தும் மாநில அளவிலான இளையோருக்கான இறகு பந்து போட்டியில் 150க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 22 May 2022, 3:03 pm

ஹைலைட்ஸ்:

  • மாநில அளவிலான இளையோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் இறகுபந்து போட்டி
  • 150க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil இறகு பந்து போட்டி
கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ட்டுவின் பேட்மிட்டன் மற்றும் திருவாக்கவுண்டனூர் சச்சின் பேட்மிட்டன் அகடாமி இணைந்து மாநில அளவிலான இளையோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் இறகுபந்து போட்டியை நடத்துகிறது.
இப்போட்டியில் நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் உட்பட பல மாவட்டத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
மேட்டூர் அணை: 88 ஆண்டுகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் ஆட்சியில்... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
நேற்று காலை 9:00 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ட்டுவின் பேட்மிட்டன் மற்றும் திருவாக்கவுண்டனூர் சச்சின் பேட்மிட்டன் அகாடமியை சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட இளையோர் இரட்டையர் பிரிவில் சிபி சித்தார்த், மோகித்,

பெண்களுக்கான 17 வயது உட்பட்ட ஒற்றையர் பிரிவில் நிஷா மற்றும் 11 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் ரோகன் முதல் பரிசை தட்டிச் சென்றார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி