ஆப்நகரம்

காதலனை கொன்ற கணவனுக்கு ஜெயில்: 2 குழந்தையுடன் மனைவி தற்கொலை!

சங்ககிரி அருகே வறுமையின் காரணமாக தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 4 Mar 2021, 3:12 pm
சேலம் மாவட்டம் சங்ககிரி புது வளவு பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரியங்கா சரத்குமார் தம்பதி. இவர்களுக்கு கிருத்திக்குமார் என்ற 6 வயது மகனும் 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
Samayam Tamil காதலனை கொன்ற கணவனுக்கு ஜெயில்: 2 குழந்தையுடன் மனைவி தற்கொலை!


இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன் பிரியங்காவிற்கு பார்த்திபன் என்ற வாலிபருடன் தகாத உறவு இருந்துள்ளது. இதுத் தொடர்பாக விஷயம் அறிந்து, ஆத்திரமடைந்த அவரது கணவர் சரத்குமார் பிரியங்காவின் தந்தை தங்கவேல், அண்ணன் நந்தகுமார் ஆகிய 3 பேரும் பார்த்திபனை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை காரணமாக பிரியங்காவின் கணவர், தந்தை, அண்ணன் ஆகிய 3 பேரையும் சங்ககிரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரியங்காவின் தந்தை தங்கவேலுவிற்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. இதற்கிடையே குழந்தைகளை கவனிக்க முடியாமல் வறுமையில் தவித்து வந்த பிரியங்கா தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

தொடர்ந்து பிரியங்கா தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பிரியங்காவின் மகன் கிருத்திக்குமார் உயிருடன் இருந்துள்ளார்.

கலை நிகழ்ச்சியா? ஆபாச அரங்கமா? கிராமிய கலைஞர்கள் புகார்

இதையடுத்து அந்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் பிரியங்காவின் சடலங்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகாத உறவால் வறுமைக்கு தள்ளப்பட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி