ஆப்நகரம்

மகனுக்கு கொரோனா செய்தி கேட்டு தாய் கிணற்றில் குதித்தார்: சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் மகனுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதை கேள்விப்பட்ட தாய் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 May 2021, 8:11 pm
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சி ஓமலூர் சாலையோர பகுதியில் செந்தில் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருபவர் தங்கவேல்-தனலட்சுமி தம்பதியின் மகன் செந்தில்நாதன். வயது 49.
Samayam Tamil மகனுக்கு கொரோனா செய்தி கேட்டு தாய் கிணற்றில் குதித்தார்: சேலத்தில் பரபரப்பு!


இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார். இதையடுத்து செந்தில்நாதனுக்குச் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்நாதனுக்குப் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட அவரது தாயார் தனலட்சுமி(73) மகன் இறந்து விடுவானோ என்ற அச்சத்தில் தன் வீட்டருகில் உள்ள 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சேலம் காபி கடை உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கிணற்றில் 40 அடி அளவுக்குத் தண்ணீர் இருந்ததால் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இவரை எடப்பாடி தீயணைப்பு வீரர்களுக்குத் தகவலறிந்து துரிதமாகச் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டுள்ளனர். இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி