ஆப்நகரம்

கலெக்டர் அலுவலகத்தில் தாரை தப்பட்டையுடன் கரகாட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் தாரை தப்பட்டையுடன் கரகாட்டம் நிகழ்ச்சி நடந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது.

Samayam Tamil 19 Apr 2021, 1:18 pm
தமிழகம் முழுவதும் கொரானா தொற்று தீவிரமடைந்து வருவதையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் அடிப்படையில் திருமண மண்டபங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளுக்கு 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், அனைத்து திருவிழாக்களும் ரத்து, மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது
Samayam Tamil கலெக்டர் அலுவலகத்தில் மேள தாளத்துடன் கரகாட்டம் நடக்கிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.


வில்லியனூர் லூர்து மாதா ஆலய 144வது ஆண்டு பெருவிழா!

இந்த உத்தரவால் தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மேள தாளம் மற்றும் கரகாட்ட கலைஞர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருமண மண்டபங்களில் அலங்காரம் செய்யும் ஸ்டேஜ் டெக்கர்ஸ், மேடை நடன கலைஞர்கள், இசைக்குழுவினர், திருமண மண்டபங்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் ஊழியர்கள் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தாரை தப்பட்டை, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு இசைக் கருவிகளுடன் வந்த இசைக் கலைஞர்கள் தங்கள் தொழில் அரசின் கட்டுப்பாடு விதிமுறைகளால் பாதிக்கப்படுவதாக கூறி தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மேள தாளங்களை வாசித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விழாக்கோலமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கோயில் கிணற்றில் எண்ணெய்; பக்தர்கள் பரவசம்

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருமண மண்டபங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். சுபநிகழ்ச்சிகளில் இசைக்கலைஞர்கள் முழுமையாக பங்கேற்கவும், மேடை கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.

நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திருவிழாக்களை உரிய கட்டுபாட்டுடன் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மேடை நடன இசைக் கலைஞர்களின் வாழ்வாதார பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அடுத்த செய்தி