ஆப்நகரம்

10.5% இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக குரல் கொடுத்த சீமான்!

வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Nov 2021, 10:28 pm
சேலத்தில் நாம்தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார்.
Samayam Tamil seeman on vanniyar reservation
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
"1967ல் தமிழ்நாடு மாநிலமாக பிரிக்கப்பட்ட நாள் நவம்பர் 1, தமிழ்நாடு என்று பெயர் அறிவிக்கப்பட்ட நாள் ஜூலை 18. தமிழர்களாகிய நாங்கள் தமிழ்நாடு நாளாக தொடர்ச்சியாக நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடி வருகிறோம். தமிழக அரசு ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது அவசியமற்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக அறிவித்தது குழந்தை பிறந்த போது பிறந்தநாளாக கொண்டாடுவது விட்டுவிட்டு, குழந்தைக்கு பெயர் வைத்த நாளை கொண்டாடுவது போல் உள்ளது. வரலாற்றை திரிக்கும் முயற்சியில் திராவிட கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு இட ஒதுக்கீடு ரத்து என நீதிமன்றம் கூறியது. எங்களை பொறுத்தவரை பெரிய ஏமாற்றம். தேர்தலுக்காக அதிமுக அரசு சட்ட வல்லுனர்களை ஆலோசிக்காமல் அறிவித்ததே மாற்றத்திற்கு காரணம் என்றார். சாதி மற்றும் மொழிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என சீமான் வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி