ஆப்நகரம்

வெயில் காலத்தில் விழுந்த இடி: சேலம் வாலிபர் போன் பேசியபடி பலி!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இடி தாக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய நேரத்தில் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Samayam Tamil 9 May 2021, 3:02 pm
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு 8 மணியளவில் பலத்த காற்றுடன் தூரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது விழுந்த இடித் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil வெயில் காலத்தில் விழுந்த இடி: சேலம் வாலிபர் போன் பேசியபடி பலி!


சேலம் வெள்ளாண்டி வலசு, அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் ஆனந்தி தம்பதியர். இவர்கள் மகன் மோகன் பாபு. வயது 24. ஓட்டுநராக பணியாற்றுகிறார்.

மோகன் பாபு தனது நண்பர்களுடன் எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசு ஒதுக்குப்புறமான பகுதியில் மரத்திற்கு அடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் பனைமரத்தில் இடி இறங்கியுள்ளது.

இதன் காரணமாக அதன் அருகில் நின்று கொண்டிருந்த மோகன்பாபு மீதும் இடி தாக்குதல் விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

கொரோனா ஹோம் குவாரன்டைன்... கலக்கும் கோவை மாணவர்கள்!

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் எடப்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர். தகவலறிந்த எடப்பாடி காவல்துறையினரும் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மோகன் பாபுவிற்கு ஏற்பட்ட விபத்து குறித்து விசாரித்து.

சம்பவ இடத்திலே மோகன் பாபு உயிரிழந்த சூழலில், அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த செய்தி