தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை விண்ணப்பித்தோருக்கு15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஏராளமானோர் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நரிக்குறவ இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாரிகள் நேரடியாக சென்று அவர்களின் விபரங்களை பெற்று உடனடியாக குடும்ப அட்டை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் கசுவரெட்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவ இன பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுத்ததன்பேரில் அங்கு வசிக்கும் 11 பேருக்கு குடும்ப அட்டை வழங்க ஆட்சியர் உடனடியாக உத்தரவிட்டார்.
இந்நிலையில் அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்மேகம் 11 நரிக்குறவ இன பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
மக்கள் ஆண்டு கணக்கில் குடும்ப அட்டைக்காக அலைந்த நிலையில் தங்கள் குடும்பத்திற்கு நேரில் வந்து விபரங்களை பெற்று, ஆட்சியர் குடும்ப அட்டை வழங்கியது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறி கண்ணீர் மல்க அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
பெண் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் ஆபீசில் பரபரப்பு!
இதனை தொடர்ந்து நன்றியின் வெளிப்பாடாக ஆட்சியருக்கு பாசிமணிகள் அளித்து ஆட்சியரிடம் தங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும், பட்டா வழங்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நரிக்குறவ இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாரிகள் நேரடியாக சென்று அவர்களின் விபரங்களை பெற்று உடனடியாக குடும்ப அட்டை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் கசுவரெட்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவ இன பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுத்ததன்பேரில் அங்கு வசிக்கும் 11 பேருக்கு குடும்ப அட்டை வழங்க ஆட்சியர் உடனடியாக உத்தரவிட்டார்.
இந்நிலையில் அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்மேகம் 11 நரிக்குறவ இன பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
மக்கள் ஆண்டு கணக்கில் குடும்ப அட்டைக்காக அலைந்த நிலையில் தங்கள் குடும்பத்திற்கு நேரில் வந்து விபரங்களை பெற்று, ஆட்சியர் குடும்ப அட்டை வழங்கியது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறி கண்ணீர் மல்க அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
பெண் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் ஆபீசில் பரபரப்பு!
இதனை தொடர்ந்து நன்றியின் வெளிப்பாடாக ஆட்சியருக்கு பாசிமணிகள் அளித்து ஆட்சியரிடம் தங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும், பட்டா வழங்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.