ஆப்நகரம்

நீட் தற்கொலையா?: உடலைப் பார்க்க காரில் வந்த எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வின் அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் உடலுக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Samayam Tamil 12 Sep 2021, 2:37 pm
சேலம் மாவட்டம் கூழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் தனுஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த இரண்டுமுறை நடைபெற்ற தேர்வில் பங்கேற்றிருந்த இவர் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
Samayam Tamil நீட் தற்கொலையா?: உடலைப் பார்க்க காரில் வந்த எடப்பாடி பழனிசாமி!


இந்த சூழலில் மீண்டும் முயற்சி செய்யும் விதமாக இன்று நடக்கவிருந்த நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் இந்த நீட் தேர்விலும் தான் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தனுஷ் இன்று அதிகாலை தன் வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தனுஷ் தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர் உடலுக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பாட்டிலால் டிரைவர் குத்தி கொலை; சரக்கு சரியா ஷேர் பண்ணலையாம்!
அவருடன் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உடன் வந்து நேரில் சென்று மாணவர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது மாணவரின் குடும்பத்தினர் கதறி அழுததோடு மாணவர் நீட் தேர்வுக்காக எடுத்த மூயற்ச்சிக்கள் குறித்து அவரது தந்தை சிவகுமார் எதிர்க்கட்சித் தலைவரிடம் கண்ணீர் மல்க விரிவாக எடுத்துரைத்தார். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி