ஆப்நகரம்

காவிரி தண்ணீர் தொடர்ந்து அதிகரிக்கிறது... விவசாயிகள் நிம்மதி!

காவிரி கரையோரத்தில் பதிவாகும் மழையின் அளவை கொண்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அமைகிறது.

Samayam Tamil 19 Nov 2020, 9:05 am
கர்நாடக மாநிலத்தில் பதிவாகும் மழையின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அமைகிறது. இப்போதைய நேரத்தில் காவிரி நதியை ஒட்டியுள்ளப் பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
Samayam Tamil காவிரி தண்ணீர் தொடர்ந்து அதிகரிக்கிறது... விவசாயிகள் நிம்மதி!
காவிரி தண்ணீர் தொடர்ந்து அதிகரிக்கிறது... விவசாயிகள் நிம்மதி!


இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி, விநாடிக்கு 11 ஆயிரத்து 361 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வரத்து நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 861ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அணையின் நீர்மட்டம் 96.15 அடியாக உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர் இருப்பு 59.96 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரும் அதேவேளைப் பாசனத்திற்காக நீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டுள்ளது.

கொட்டித் தீர்த்த மழை... குளிர்ந்து போன சேலம்

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி