ஆப்நகரம்

செவிலியர்களுக்குப் பணி நீட்டிப்பு... ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மனுவை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக கூறியதால் போராட்டத்தை கைவிட்டனர்.

Samayam Tamil 23 Dec 2020, 1:28 pm
சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil nurses protest requesting tenure extension from temporary postings
செவிலியர்களுக்குப் பணி நீட்டிப்பு... ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்


சேலம் மாவட்டத்தில் கொரானா அதிகம் இருந்த காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிகமாக செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய இவர்களுக்கு தொகுப்பூதியமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அவர்களது பணிக்காலம் முடிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 34 செவிலியர்களை பணிநீக்கம் செய்து மருத்துவ மனை நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தாங்கள் ஏற்கனவே இருந்த பணிகளை எல்லாம் விட்டுவிட்டு அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்ததாகவும் கொரானா காலத்திலும் உடல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து பணியாற்றிவருவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், அரசு தங்கள் நலன் கருதி பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.

20க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மனுவை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக கூறியதால் போராட்டத்தை கைவிட்டனர்.

அடுத்த செய்தி