ஓ.பன்னீர் செல்வத்தின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் 72 கிலோ கேக் வெட்டி அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கினர்.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் 72ஆவது பிறந்தநாள் விழாவை அவரது ஆதரவாளர்கள் தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் அவரது பிறந்தநாள் விழாவை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 72 கிலோ கேக்கை அலங்கரித்து வைத்து பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் பிறந்தநாள் கேக் வழங்கினர். தொடர்ந்து ஏழை எளியவருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியைப் பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி அலைந்து கொண்டிருக்கிறார். முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகித்த பதவிகளை அடைய வேண்டும் என ஒரே குறிக்கோளுடன் கட்சியில் இது போன்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். நீதிமன்றத்தில் இது குறித்து நல்ல தீர்ப்பு வரும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் குறித்து ஆராயப்பட வேண்டிய ஒன்று. தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது அவசியம். ஆளுநர் வெளிநடப்பு செய்தது சட்டமன்ற வரலாற்றில் எப்போதும் இல்லாதது” என்று கூறினார்.
கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி குற்றவாளியாக சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு விட்டதால் அவர் சட்டமன்றத்தில் உட்கார முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்கடி வெளிநடப்பு செய்து வருவது ஏன் என்றும் பெரியாரின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மதிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி நடந்து கொள்ள வேண்டும் என்றும் கருப்பு சட்டை போட்டால் மட்டும் போதாது அந்த கருப்பு சட்டைக்கு என்ன அர்த்தம் என்று புரிந்து போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக இருந்தபோது இருந்த வீட்டில் தான் தற்போதும் இருந்து வருகிறார். இதன்மூலம் திமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் மறைமுக ஒப்பந்தம் எற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் 72ஆவது பிறந்தநாள் விழாவை அவரது ஆதரவாளர்கள் தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் அவரது பிறந்தநாள் விழாவை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 72 கிலோ கேக்கை அலங்கரித்து வைத்து பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் பிறந்தநாள் கேக் வழங்கினர். தொடர்ந்து ஏழை எளியவருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியைப் பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி அலைந்து கொண்டிருக்கிறார். முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகித்த பதவிகளை அடைய வேண்டும் என ஒரே குறிக்கோளுடன் கட்சியில் இது போன்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். நீதிமன்றத்தில் இது குறித்து நல்ல தீர்ப்பு வரும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் குறித்து ஆராயப்பட வேண்டிய ஒன்று. தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது அவசியம். ஆளுநர் வெளிநடப்பு செய்தது சட்டமன்ற வரலாற்றில் எப்போதும் இல்லாதது” என்று கூறினார்.
கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி குற்றவாளியாக சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு விட்டதால் அவர் சட்டமன்றத்தில் உட்கார முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்கடி வெளிநடப்பு செய்து வருவது ஏன் என்றும் பெரியாரின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மதிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி நடந்து கொள்ள வேண்டும் என்றும் கருப்பு சட்டை போட்டால் மட்டும் போதாது அந்த கருப்பு சட்டைக்கு என்ன அர்த்தம் என்று புரிந்து போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக இருந்தபோது இருந்த வீட்டில் தான் தற்போதும் இருந்து வருகிறார். இதன்மூலம் திமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் மறைமுக ஒப்பந்தம் எற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.