ஆப்நகரம்

வேளாண் அதிகாரி திமுகவுக்காக ஏற்காட்டில் போட்டி: பணி நீக்க உத்தரவு போட்டாச்சு!

வேளாண்மைத் துறையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் திலகவதி என்பவர் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 8 Mar 2021, 1:12 pm
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையில் உதவி தொழில்நுட்ப மேலாளராக பணியாற்றி வந்தவர் திலகவதி. இவர் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil வேளாண் அதிகாரி திமுகவுக்காக ஏற்காட்டில் போட்டி: பணி நீக்க உத்தரவு போட்டாச்சு!


இது குறித்து ஊடகங்களில் செய்தி பரவியதை அடுத்து அவருக்கு முறையாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் செய்தியின் அடிப்படையில் அவரை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையில் உதவி தொழில்நுட்ப மேலாளர் தற்காலிகமாக பணியாற்றி வந்த அவர் அரசியல் கட்சி ஒன்றில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அவரை பணி நீக்கம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தாலியை அற்று ஓட முயற்சி ஒருவருக்கு மக்கள் செருப்படி: சேலம் சம்பவம்!

அரசு ஊழியர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி