ஆப்நகரம்

சேலம் காபி கடை உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

சேலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மல்லூர் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Samayam Tamil 5 May 2021, 1:14 pm
சேலம் நாழிக்கல்பட்டி பிரிவு ரோடு பகுதியில் லோகநாதன் என்பவர் காபி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு காபி பார் முன்பாக மணிகண்டன் என்பவர் அவரது மனைவியுடன் குடும்ப தகராற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
Samayam Tamil சேலம் காபி கடை உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!


இதையடுத்து கடையின் முன்பு தகராற்றில் ஈடுபட வேண்டாம் எனக் காபி கடை உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் அந்த கடை உரிமையாளருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து மணிகண்டன் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் காபி கடை திறக்கப்பட்டது. அதன் உரிமையாளர் லோகநாதன் கடையைச்
சுத்தம் செய்து குப்பையை வெளியே கொட்டுவதற்காகச் சென்றுள்ளார்.

சேலம்-சென்னை சாலையில் 6 மாதமாக பள்ளம்: அதிகாரிகள் கண்ணில் பட்டதே இல்லையா?

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் பீர் பாட்டிலில் தயார் செய்யப்பட்ட பெட்ரோல் குண்டை, அதை வைத்துத் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாகப் பகுதி மக்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் தப்பியோடிய மணி மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து இரண்டு தனிப்படைகள் அமைத்துத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

மணிகண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவராக இருந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி