ஆப்நகரம்

திருக்குறள் பேசி தமிழர்களை ஏமாற்ற முடியாது: பிரதமரை சாடும் வைகோ

ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் 8 வழி சாலையை அமைத்தே தீருவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி துடிப்பது ஏன் என்று சேலத்தில் மதிமுக சார்பில் நடைபெற்ற நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்ற அதன் பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்...

Samayam Tamil 17 Feb 2021, 2:26 pm

ஹைலைட்ஸ்:

  • 8 வழி சாலையை அமைத்தே தீருவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி துடிப்பது ஏன்
  • சேலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வைகோ
சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல மதிமுக சார்பில் இன்று நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் மற்றும் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்கள் சார்பில் மொத்தம் 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, “திராவிடத்தை அழிக்கும் முயற்சியை இந்துத்துவா சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தி திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வருகிறது . ஆனால் இதனை தடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் திட்டமான எட்டு வழி சாலை திட்டத்தை கொண்டுவர முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி துடிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய வைகோ, இந்த மத்திய,மாநில அரசுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.மக்கள் விரோத திட்டங்களை குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை செயல்படுத்திட தமிழகத்தில் அனுமதித்து தவறான முடிவு” என்று பேசினார்.

எங்ககிட்டயே பணம் கேக்குறியா? பாரில் அடிதடி நடத்திய அதிமுக

பிரதமர் திருக்குறளை பேசி, தமிழர்களை ஏமாற்ற முடியாது. டீசல், பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வேளாண் சட்டத்தை நிறைவேறியதன் மூலமாக மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு ஆகும். வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத எடப்பாடி அரசு, அடிமை அரசு என்று குற்றம்சாட்டினார்.

அடுத்த செய்தி