ஆப்நகரம்

20% இடஒதுக்கீடு... அக்னி கரகமெடுத்து ஆடி வந்த பாமகவினர்

மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமையில் பாமகவினர் அக்னி கரகம் எடுத்து ஆடி வந்து போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 24 Dec 2020, 8:16 am
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி தேவூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அக்னி கரகம் எடுத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Samayam Tamil அக்னி கரகத்துடன் போராட்டம்


தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் அதனை அடுத்து சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி தேவூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமையில் பாமகவினர் அக்னி கரகம் எடுத்து ஆடி வந்து போராட்டம் நடத்தினர்.

பேரூராட்சி அலுவலகம் முன்பு பேசுகையில், “வன்னியர்களுக்கு 20% இட ஒதிக்கீடு வேண்டும் என கோஷமிட்டு மக்கள் தொகை அடிப்படையில் ஜாதி வாரியாக கணக்கெடுத்து அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி பேசினார் ஒவ்வொரு பேரூராட்சி பகுதியில் ஆயிரம் பேர் கையெழுத்திட்டு, மாநில அரசுக்கு கோரிக்கை மனுவை பேரூராட்சி அலுவலரிடம் மாவட்ட செயலாளர் தலைமையில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன், தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் லட்சுமணன், மாவட்ட துணைச் செயலாளர் மகேந்திரன், மாநில மாருத்துவ அணி மருத்துவர் ஆதிஅருன்மணி ஆகியோர் கொடுத்தனர்.

முதல்வர் மீது வழக்குப் போட்டால் நீதிமன்றம் விசாரிக்காதா? புதிய அரசாணை

அப்போது ஒன்றிய செயலாளர்கள் பூபதி, சத்யா, அரசிலாமணி நகர செயலாளர் சேட்டு, அரசிலாமணி பேரூராட்சி செல்வம் தலைவர் பழனிச்சாமி செல்வம் அங்கப்பன் ராஜசேகர் கணேசன் ராஜீவ் காந்தி 500க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்

அடுத்த செய்தி