ஆப்நகரம்

அரசு மருத்துவமனையில் கொலை வழக்கு கைதி தற்கொலை... சேலத்தில் பரபரப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொலை கைதி நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

Samayam Tamil 27 Jan 2021, 9:14 am
Samayam Tamil Suicide file shot
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிபகுதியை சேர்ந்தவர் முத்துவேல். இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி சிறை வளாகத்திலிருந்து மாடி மீது ஏறி குதித்து தற்கொலைக்கு முயன்றார்

பாதிக்கப்பட்ட முத்து வேலை சிறைத் துறையினர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை சூப்பர் மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கழிவறைக்குச் சென்றுவிட்டு வருவதாகப் போனவர், ஜன்னல் வழியாகக் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

நிரந்தர வெள்ளத்தில் தவிக்கப்போகும் சென்னை... காத்திருக்கும் அபாயம்?

கைதி ஒருவர் அரசு மருத்துவமனையில் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி