ஆப்நகரம்

பப்ஜி மதன் சேலம் வீட்டில் ஃபேன்ஸ் கூட்டம்: ஆனால் இவங்க கழுவி ஊற்றுகிறார்கள்!

பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் சேலத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுவார் எனத் தகவல் வெளியானதையடுத்து அவரது வீட்டின் முன்பு ஏராளமானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 18 Jun 2021, 8:29 pm
யூட்யூப் மூலம் சிறுவர்-சிறுமிகளை பப்ஜி விளையாட்டுக்குள் உட்படுத்திப் பேசத் தகாத வார்த்தைகளால் வர்ணனை கொடுத்துச் சிக்கலில் மாற்றியவர் பப்ஜி மதன்.
Samayam Tamil பப்ஜி மதன் சேலம் வீட்டில் ஃபேன்ஸ் கூட்டம்: ஆனால் இவங்க கழுவி ஊற்றுகிறார்கள்!


இவர் நடத்தி வந்த யூட்யூப் சேனல்களில் ஆபாசமாகப் பேசி சிறுவர்-சிறுமியர்களைத் தனது வளையத்தள பக்கத்திற்குள் கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து தொடர் புகார்கள் எழுந்ததையடுத்து அவர் இன்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.

பல நாட்களாகத் தேடப்பட்டு வந்த மதன் கைது செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர் எனத் தவறான தகவல் பரவியுள்ளது. இதையடுத்து பப்ஜி மதனைக் காண மக்கள் அதிகளவில் கூடி நின்றனர்.

தனியார் மருத்துவர்கள் மீது தொடர் தாக்குதல்: சேலத்தில் தீவிர போராட்ட எச்சரிக்கை!
சில மணி நேரங்கள் காத்திருந்த பொது மக்கள் மதன் கைது செய்யப்பட்ட வழக்கிற்கு எதற்காகச் சேலம் வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பப்ஜி மதன் செயலுக்குக் குறித்து அவரது வீடு அமைந்துள்ள தாதகாப்பட்டி பகுதி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிறுவர்-சிறுமிகளை விளையாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்து ஆபாசக் கருத்துக்களைத் திணித்து அவர்களை அடிமைப் படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் வேதனைப் படுகின்றனர்.

அடுத்த செய்தி