ஆப்நகரம்

குடிநீர், சாலை வசதி வழங்குக; மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்!

குடிநீர், சாலை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்!

Samayam Tamil 21 Jan 2022, 6:21 pm
சேலத்தில் குடிநீர், சாலை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சின்னேரி வயல் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Samayam Tamil கோப்பு படம்



சேலம் மாநகர 26வது கோட்டம் சின்னேரி வயல்காடு பகத்சிங் தெருவில் வசிப்பவர்களுக்கு 45நாட்களுக்கு மேல் குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முறையான குடிநீர் சப்ளையை செய்யக் கோரியும், சாலை வசதியை மேம்படுத்தக் கோரியும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவலை அறிந்து வந்த மாநகராட்சி உதவி ஆணையர் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணி, சீனிவாசன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடனடியாக உங்கள் பகுதிக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதாகவும், 15 நாட்களில் கிடப்பில் உள்ள சாக்கடை மற்றும் சாலை அமைக்கும் பணியை முடித்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கை விட்டனர்.


இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க மாநகர தலைவர் சதீஷ்குமார் மற்றும் மாநகர செயலாளர் குருபிரசன்னா சிபிஎம் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் கதிர்வேல், ராஜேஷ்குமார் கிளை செயலாளர்கள் ரம்யா, ஞாணவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

சேலம் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் சப்ளை செய்வதில் அலட்சியமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை அரசு கவனத்தில்கொள்ளுமா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி