சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட 29 வது வார்டு ஏரி ரோடு பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவர் அவரது வீட்டின் அருகேயுள்ள கான்கிரீட் சாலைக்கு பொதுமக்கள் செல்லும் பாதையை தடுத்து தடுப்பு சுவர் அமைத்துள்ளார். இதுகுறித்து அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் நகராட்சி ஆணையாளர், காவல்துறை ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதனடிப்படையில் வட்டாட்சியர் முத்துராஜா, நகராட்சி ஆணையர் முருகன், காவல்துறை உதவி ஆய்வாளர் ஆகியோர் பொதுவழி தடத்தை தடுத்து தடுப்பு சுவர் அமைத்ததை அகற்றுவதற்காக ஜேசிபி இயந்திரத்துடன் ஸ்பாட்டுக்கு சென்றுள்ளனர்.
வனத்துறையினருக்கே தண்ணி காட்டும் கரடி... பீதியில் பொதுமக்கள்!
அப்போது தடுப்புச்சுவரை அகற்றக்கூடாது என்று ஒரு தரப்பினரும், அகற்றியே தீர வேண்டும் என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அதன் பின்னர் இருதரப்பினரையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வர சொல்லிவிட்டும், அங்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காணப்படும் என்று கூறிவிட்டும் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனடிப்படையில் வட்டாட்சியர் முத்துராஜா, நகராட்சி ஆணையர் முருகன், காவல்துறை உதவி ஆய்வாளர் ஆகியோர் பொதுவழி தடத்தை தடுத்து தடுப்பு சுவர் அமைத்ததை அகற்றுவதற்காக ஜேசிபி இயந்திரத்துடன் ஸ்பாட்டுக்கு சென்றுள்ளனர்.
வனத்துறையினருக்கே தண்ணி காட்டும் கரடி... பீதியில் பொதுமக்கள்!
அப்போது தடுப்புச்சுவரை அகற்றக்கூடாது என்று ஒரு தரப்பினரும், அகற்றியே தீர வேண்டும் என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அதன் பின்னர் இருதரப்பினரையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வர சொல்லிவிட்டும், அங்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காணப்படும் என்று கூறிவிட்டும் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.