ஆப்நகரம்

பிரபல ரவுடி கெங்கவல்லி சுபாஷ் கைது

கெங்கவல்லி பகுதியில் விஷம எரிசாராயம் விற்றபோது போலீசார் சுபாஷை கைது செய்தனர்.

Samayam Tamil 2 Dec 2020, 5:02 pm
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil கெங்கவல்லி


சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் உள்ள மீனவர் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் . 38 வயதாகும் இவர்மீது கெங்கவல்லி, விழுப்புரம் மட்டுமின்றி, ஆத்தூர் மதுவிலக்கு ஸ்டேஷன்களில், கொலை, கொள்ளை, திருட்டு, சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடையே 2016 முதல் ரவுடி பட்டியலில் உள்ள சுபாஷ் கடந்த 7ம் தேதி கெங்கவல்லி பகுதியில் விஷம எரிசாராயம் விற்றபோது போலீசார் சுபாஷை கைது செய்தனர்.

கொரோனா ரத்த மாதிரி: நாகர்கோவிலில் இரு பெண்கள் மரணம்!

இதனையடுத்து சுபாஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாகானிக்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் ராமனுக்கு பரிந்துரைத்தார். அதன்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் சுபாஷை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி