ஆப்நகரம்

இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் 25,318 பேருக்கு தடுப்பூசி...

25 ஆயிரத்து, 318 பேருக்கு, முதல்கட்டமாக, தடுப்பூசி போடப்படுகிறது.

Samayam Tamil 17 Jan 2021, 11:54 am
கலெக்டர் ராமன் தொடங்கிவைத்த பின் கூறியதாவது: மாவட்டத்துக்கு, 27 ஆயிரத்து, 800 'டோஸ் கோவிஷீல்டு' தடுப்பூசி வரப்பெற்று, கடந்த, 13ல், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலக, மண்டல குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டன.
Samayam Tamil corona magnifize


சேலம் சுகாதார மாவட்டத்தில், அரசு மருத்துவமனை முன்கள பணியாளர் - 8,617, தனியார் முன்கள பணியாளர் - 12 ஆயிரத்து, 177 என, 20 ஆயிரத்து, 794 பேருக்கு தடுப்பூசி போடப்படும். ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், அரசு மருத்துவமனை முன்கள பணியாளர் - 2,919, தனியார் முன்கள பணியாளர் - 1,605 என, 4,524 பேர். இவர் களுடன் சேர்த்து, மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 318 பேருக்கு, முதல்கட்டமாக, தடுப்பூசி போடப்படுகிறது.

மேட்டூர், இடைப்பாடி, ஆத்தூர், ஓமலூர் அரசு மருத்துவமனைகள், தம்மம்பட்டி, தலைவாசல், காரிப்பட்டி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 12 முகாம்களில், தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. முகாமுக்கு, தலா, 100 பேர் வீதம், தினமும், 1,200 பேருக்கு, தடுப்பூசி போடப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் செல்வக்குமார் கூறுகையில், ''இன்று(நேற்று), முதலாம் நாளில், சேலம், 181, ஆத்தூர், 107 என, 288 பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில், 310 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழக அளவில், சேலம் இரண்டாம் இடத்தில் உள்ளது,'' என்றார்.

அடுத்த செய்தி