ஆப்நகரம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்; கொளுத்தும் வெயிலிலும் தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம்!

அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்று வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 26 Apr 2023, 1:28 pm

ஹைலைட்ஸ்:

  • அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம்

  • சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

  • அங்கன்வாடி அலுவலகம் அனைத்தும் மூடப்பட்டுள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
சேலத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் அரசு ஊழியராக பணி அமர்த்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்காடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதனால் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தி இரவில் செல்போன் விளக்கை ஏந்தி எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
விடிய விடிய தொடரும் போராட்டம்
மேலும் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அறிவித்தனர். இரவு முழுவதும் விடிய விடிய நடைபெற்ற போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்தும் அரசுக்கு ஐலேசா போட்டும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் பத்தாம் வகுப்பில் இருந்து நீட் தேர்வுக்கான பயிற்சி...தனியார் பள்ளிகள் அடாவடி

கோடை கால விடுமுறை
மேலும் அங்கன்வாடி ஊழியர்கள் கூறுகையில் கோடை காலம் தொடங்கியுள்ளதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது அது போலவே அங்கன்வாடிகளுக்கும் கோடை விடுமுறை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.இந்நிலையில் மே மாதம், கோடை விடுமுறை அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி கால வரையற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நேற்று மாலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இன்று அங்கன்வாடிகள் செயல்படவில்லை
இந்நிலையில் சேலத்தில் அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு வராததால் அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் உள்ள 2632 அங்கன்வாடி மையங்களில் பல அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படாததால் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்லவில்லை.

அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொளுத்தும் வெயிலில் குடை பிடித்து அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி வருகின்றனர். இப்பொழுது பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி