ஆப்நகரம்

சேலம்: எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உண்டியல் உடைப்பு

சேலம் மாநகரின் பிரசித்தி பெற்ற எல்லைபிடாரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து துணிகர கொள்ளை.

Samayam Tamil 7 Nov 2020, 2:14 pm
சேலம் மாநகரின் பிரசித்தி பெற்ற எல்லைபிடாரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil உடைக்கப்பட்ட உண்டியல்


சேலம் அரசு கலைக்கல்லூரி அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் மாதத்தில் கோவில் திருவிழா நடைபெறும்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு திருவிழா நடைபெறாததால் உண்டியல் திறக்கப்படாமல் இருந்தது. இந்த கோவிலில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பூஜைகள்,அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அம்மனை தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.

நீரில் மூழ்கிய உப்பளங்கள்... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அஸ்தம்பட்டி காவல்நிலைய போலீஸார் தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சிசிடிவி காட்சியில் மர்மநபர் ஒருவர் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை பையில் அள்ளி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி