ஆப்நகரம்

Farming Acts 2020: திரும்பப் பெறுக... இடைவிடாத விவசாயிகள் போராட்டம்

மத்திய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.

Samayam Tamil 23 Jan 2021, 12:19 pm
மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இதன் அடிப்படையில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டியக்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று நடைபெற்றது.
Samayam Tamil விவசாயிகள் போராட்டம்


சிஐடியு மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற் சங்கங்களை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக உள்ள மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணைபோகுவதை கைவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவான செயல்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும் .

தேர்தல் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்... காரணம் தெரிஞ்சா அசந்திடுவீங்க!

58 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு புறந்தள்ள கூடாது என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் மொட்டையடித்து கோவணம் கட்டியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விவசாயிகளின் தற்போது நிலை என்பதை உணர்த்தும் வகையில் கண்டனத்தை பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

அடுத்த செய்தி