ஆப்நகரம்

'இல்லம் தேடி கல்வி' டான்ஸ் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஹெட்மாஸ்டர் - வீடியோ!

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித்திட்டத்தை வலியுறுத்தி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நடனமாடி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Samayam Tamil 7 Dec 2021, 2:07 pm
கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கல்வித்துறை முடக்கம் காரணமாக மாணவர்களின் கல்வி அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது . ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது.
Samayam Tamil tn school education


கிராமப்புற மாணவர்களுக்கு போதுமான இணையவசதி மற்றும் செல்போன் வசதி இல்லாததால் அவர்களின் கற்றலில் கடினமான சூழல் நிலவியது. இது போன்ற கற்றலில் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய, கல்வியாளர்களும், யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும், தமிழக அரசின் குழுவில் உள்ள வல்லுனர்களும் அளித்த பரிந்துரையின்படி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில நிதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்திட்டத்தை, கடந்த அக்டோபர் 27 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மற்ற எந்த மாநிலங்களும் எடுக்காத முயற்சியை தமிழக அரசு எடுத்த நிலையில், இதற்க்கு மக்களிடையே வரவேற்பு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. இத்திட்டத்தில் இணைய தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணியை மேலாண்மைக்குழு செய்தது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது..? அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட அப்டேட்!

இதனிடையே, தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க சேலம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கபட்டி ஊராட்சி தமிழக அரசின் தொடக்கப்பள்ளி பகுதிக்கு உட்பட்ட மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி வீரபாண்டி வட்டார வள மையத்தின் சார்பாக பொறுப்பு மேற்பார்வையாளர் சுடர்மணி தலைமையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் தாரை தப்பட்டைகள் முழங்க தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் நடனமாடியது கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. கிராமப்பகுதி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முருங்கபட்டி குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர் திருமதி தேன்மொழி, திரு. பெருமாள் அவர்களும் கலந்துகொண்டு தீபம் இல்லம் தேடி கல்வி என்ற கலைக்குழு இத்திட்டத்தை மிகச் சிறப்பான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல உதவியதிற்கு நன்றி தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வட்டார வள மையத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி