ஆப்நகரம்

சாலையக் கடக்க முயன்றவர் விபத்தில் தலை நசுங்கி பலி

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

Samayam Tamil 25 Nov 2020, 11:50 am
சென்னை - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், சேலம் பட்டதாரி வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ஆத்தூர்


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் மோட்டூரை சேர்ந்த அரசு போக்குவரத்து ஓட்டுனர் வெங்கடேசனின் மகன் கலையரசன் (வயது 19 ). பட்டதாரி இளைஞரான இவர் இன்று வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக மோட்டூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டுனர் பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ஆத்தூர் அருகே சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழனியாபுரி பிரிவு சாலையை கடக்க முயன்ற போது கள்ளக்குறிச்சியில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கி சென்ற டாரஸ் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கோயம்பேடு மார்க்கெட்டே திறந்தாச்சு..! திருச்சி காந்தி மார்க்கெட்டை திறப்பதில் என்ன சிக்கல்?

இதில் கலையரசன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை விபத்தில் இறந்து போன கலையரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி