ஆப்நகரம்

Salem: பூட்டு முனியப்பன் கோயில் வெண்கலச் சிலை திருட்டு

பிரசித்தி பெற்ற சேலம் பூட்டு முனியப்பன் கோவிலில் இருந்த வெண்கல அம்மன் சிலை திருடி செல்லப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Feb 2021, 4:50 pm
அண்மைக்காலமாக சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை, கொள்ளை, முகமூடித் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், கோயில் சிலையே திருடப்பட்டுள்ளது.
Samayam Tamil poottu muniyappan


சேலம் அஸ்தம்பட்டி அடுத்த ஏற்காடு சாலையில் அமைந்துள்ளது பூட்டு முனியப்பன் கோவில். இந்தக் கோவிலில் பக்தர்கள் வேண்டுதல் வைத்து வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் பூட்டை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

சமீப காலமாக தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் இருந்த வெண்கலத்தினாலான காளியம்மன் சிலை நேற்று இரவு திருடி செல்லப்பட்டுள்ளது. இன்று காலை கோவிலுக்கு வந்த பார்த்தபோது அம்மன் சிலை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இவர் ஒரு மங்குனி 24ஆம் புலிகேசி: ஸ்டாலினை வசைபாடும் செல்லூர் ராஜு

இதனையடுத்து பூசாரி மற்றும் பக்தர்கள் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி