ஆப்நகரம்

சேலம்: 30 ஆயிரத்தை தொட்டது கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

Samayam Tamil 3 Dec 2020, 2:20 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன என்ற தோற்றம் காட்டப்பட்டாலும், உண்மை வேறாக இருக்கிறது. நூற்றுக்கணக்கில் தொற்று இருந்தபோது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தொற்று தொடர்பான விழிப்புணர்வும் இருந்தது. தற்போது நாளொன்றுக்கு ஆயிரத்தில் பாதிப்புகள் பதிவாகின்றன. எனினும், மக்கள் இயல்புநிலையில் இருப்பதால் நோய்ப் பாதிப்பு குறைந்துவிட்டதாகத் தோற்றம் அளிக்கிறது.
Samayam Tamil corona up and down


இந்நிலையில், சேலம் மாவட்டத்தில், நேற்று, 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

சேலம் மாநகராட்சியில், 38 பேர், மேட்டூர், 9, கொளத்தூர், 8, நங்கவள்ளி, ஓமலூர் தலா, 6, சங்ககிரி, 5, ஆத்தூர், 4, மேச்சேரி, சேலம் ஒன்றியம், தலைவாசல் தலா, 3, காடையாம்பட்டி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி தலா, 2, இடைப்பாடி, மகுடஞ்சாவடி, வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஏற்காட்டில், தலா ஒருவர் என, 97 பேருக்கு தொற்று இருப்பது, நேற்று கண்டறியப்பட்டது.

இதன் 30 ஆயிரத்து, 6 ஆக உயர்ந்தது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 60 பேர், நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 66 மற்றும் 82 வயதுடைய முதியவர்கள் கொரோனாவால் பலியாகினர்.

அடுத்த செய்தி