ஆப்நகரம்

3 நாளில் 3 கோடிக்கும் மேல்... கலக்கும் காய்கறி விற்பனை

சேலம் ஒரு மாவட்டத்தில் மட்டும் காய்கறி விற்பனையும் கடந்த 3 நாட்களில் 3 கோடி ரூபாய்க்கும் மேல் நடந்துள்ளது. ​​

Samayam Tamil 16 Jan 2021, 8:12 am
தமிழர்களின் வாழ்வியலை வணங்கும் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, கிழங்கு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சிறப்புப் பொருட்களின் விற்பனை இந்த ஆண்டு கவனிக்கத்தக்கதாக அமைந்தது. குறிப்பாக பல மாவட்டங்களில் இந்த வர்த்தகம் கோடிக்கணக்கில் நடைபெற்றதையிட்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Samayam Tamil காய்கறிகள்


இந்நிலையில், சேலம் ஒரு மாவட்டத்தில் மட்டும் காய்கறி விற்பனையும் கடந்த 3 நாட்களில் 3 கோடி ரூபாய்க்கும் மேல் நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகிய 3 பண்டிகை நாட்களிலும் உழவர் சந்தைகளில், காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் செல்வதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

இளவட்டக் கல் தூக்கும் போட்டி... ஆண்களை மிரட்டிய பெண்கள்

போகிப் பண்டிகை நாளன்று, 336.81 டன் அளவுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் மொத்தம் ரூ. 1.05 கோடிக்கு விற்பனையானது.

அடுத்த செய்தி