ஆப்நகரம்

மீட்புப்பணி: கடலூருக்கு விரையும் சேலம் பணியாளர்கள்

சேலத்தில் இருந்து புயல் மீட்பு பணிக்காக கடலூருக்கு செல்லும் பணியாளர்கள்

Samayam Tamil 26 Nov 2020, 10:40 am
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது (நிவர்) புயலாக உருவெடுத்து மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே நேற்று இரவு முதல் அதிகாலை வரை கரையைக் கடந்தது.
Samayam Tamil கடலூர் செல்லும் சேலம் பணியாளர்கள்


இதனையடுத்து கடலோர மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் 88 தூய்மைப் பணியாளர்கள்,6 மேற்பார்வையாளர்கள் 4 மின் பணியாளர்கள்,3 குடிநீர் இணைப்பு பணியாளர்கள்,6 செயல் அலுவலர்கள், 3 உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட 110 பணியாளர்கள் கடலூரில் மீட்புப்பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், மீட்புப் பணிக்கான உபகரணங்கள் மற்றும் மாநகராட்சி லாரிகள் ஆகியவையும் கடலூர் மாவட்டத்திற்கு சேலத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துரிதமான இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைக்காக சேலம் ஆட்சியர் ராமனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த செய்தி